...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 8, 2019

                                                  முக்கிய     செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       *1986 க்கு முன்பாக PA INDUCTION TRAINING காலத்தை TBOP பதவிஉயர்விற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உத்தரவை நமது கோட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுவிட்டது .35 ஊழியர்களுக்கு முதற்கட்டமாக 90 நாட்களுக்கு முன்தேதியி ட்டு  TBOP கொடுக்கப்பட்டுள்ளது .இதில் சில ஊழியர்களுக்கு இந்த   உத்தரவு வழங்கப்படவில்லை .இதற்கு நிர்வாகம் தெரிவிக்கின்ற பதில் என்னவென்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கான பயிற்சிக்கான உத்தரவுகள் நிர்வாகத்திடம் இல்லை என்பதுதான் .இந்த வகையில் இதுவரை நமக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் தோழியர்கள் 
S .விஜயராணி S .தெய்வராணி மற்றும் ராணி அன்பரசி என்ற மூன்று தோழியர்கள்  விடுபட்டுள்ளார்கள் .கோட்ட சங்கம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும் இந்த உத்தரவை பெற்றுத்தரும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
                    * MACP குறித்து மீண்டும் ஒரு வழிகாட்டுதலை மத்திய அரசு 22.10.2019அன்று வெளியிட்டுள்ளது .அதன்படி 
* ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு முறை MACP க்கான ஸ்க்ரீனிங் கமிட்டி கூடவேண்டும் (.ஏப்ரல் -செப்டம்பர் ) க்கான கமிட்டி ஜனவரி முதல் வாரத்திலும் (அக்டோபர் -மார்ச்) க்கான கமிட்டி ஜூலை முதல் வாரத்திலும் கூடவேண்டும் 
*25.07.2016 க்கு பிறகு MACP வருகிறவர்களுக்கு 2013-2014 -2014-2015 -2015-2016 ஆண்டுகளுக்கு கிரேடிங் GOOD என்றும் 2016-2017 மற்றும் 2017-2018 ஆண்டுகளில் VERY GOOD என்றும் இருக்க வேண்டும் 
*ரெகுலர் பதவி உயர்வை ஏற்க மறுத்த ஊழியர்களுக்கு MACP பதவி உயர்வு பரிசீலிக்க கூடாது 
 *தமிழ் மாநிலத்தில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான GDS ஊழியர்களிலிருந்து MTS ஊழியர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.--தேர்வு நாள் :- 22 12 2019 
இந்த தேர்வினை எழுத GDS ஊழியர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
 2018ம்ஆண்டுக்கான தேர்வு எழுதுவதற்கு 01.04.2018 மூன்றாண்டுகள் GDS ஊழியராக பணி முடித்து இருக்க வேண்டும்.
 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதற்கு O1.01. 2019 அன்று மூன்றாண்டுகள் GDS ஊழியராக பணி முடித்து இருக்க வேண்டும்.
 கல்வித்தகுதி :- பத்தாம் வகுப்பு
*BSNL VRS  திட்டத்திற்கு இதுவரை குரூப் A பிரிவில் 1856 பேர்களும் குரூப் B பிரிவில் 4044 பேர்களும் குரூப் C பிரிவில் 15216 பேர்களும் 
குரூப் D பிரிவில்2042  பேர்களும் என சுமார் 20000 பேர்களுக்கு மேல் விருப்பம் தெரிவித்து OPT செய்துள்ளார்கள் இது 07.11.2019 தேதியின் நிலைமை .(இதற்கு பெயர் தான் தானா சேர்ந்த கூட்டமா ?)
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. Have a good day
    BSNL staffs get the VRS.is very bad news.But in 1989-90 year at that time (please ignore it is not ncorrect year)
    the Head TELEGRAPH employees leader speech at TIRUNELVELI H.O
    on bonus struggle we are ready to accept the central government guide to divide POST AND TELEGRAPH DEPARTMENT.Because POST office run in loss in postcardand we are not accept the loss.hence we got more than few days bonus for postal department.At that time they accept to divide department.Now our BSNL comrades get the bad news.
    We also never accept any divide scheme I our depart

    ReplyDelete